கால்டன் இல்லத்தை நாமலின் பெயருக்கு மாற்றிய மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் தனது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிலர் 'ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள்' என்கின்றனர் எனவும் கருத்தொன்றை முன்வைத்துள்ளார். வலைதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். நேர்த்தியான சொத்து விபரங்கள் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''நான் நாடாளுமன்றுக்கு வருகை தந்த காலத்தில் இருந்து இன்று வர...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் சொத்துகள் இல்லாத ஏழைகள் என்று சிலர் விமர்சிப்பதாக குறிப்பிட்ட நாமல், தனது சொத்து விபரங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வந்த காலம் முதல் இன்று வரையிலான தனது சொத்து விபரங்கள் குறித்து அவர் இந்த நேர்காணலில் கருத்து தெரிவித்துள்ளார்.