PulseNews
லைஃப் ஸ்டைல்

சாதனைப் பாதையில் புதுச்சேரி காவல்துறை: அமித் ஷா வழங்கிய குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் புதுச்சேரி காவல்துறையின் சிறப்பான சேவை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தொழில்முறை திறன் மற்றும் தொடர்ச்சியான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்த விருதுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கினார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், புதுச்சேரி காவல்துறைக்கு பெருமைமிகு குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி கோரிமேடு காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான அணிவகுப்பு விழாவில் வழங்கப்பட்டது. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் சார்பில் இப்பெருமைமிகு வண்ணக்கொடியை வழங்கினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரத்தின் மூலம், நாட்டில் காவல்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான குடியரசுத் தலைவர் வண்ணக்கொடியைப் பெறும் 18-வது மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் என்ற பெருமையை புதுச்சேரி பெற்றுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் புதுச்சேரி காவல்துறையின் சிறப்பான சேவை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தொழில்முறை திறன் மற்றும் தொடர்ச்சியான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலேயே இந்த உயரிய கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புமிக்க விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர், புதுச்சேரி முதலமைச்சர், புதுச்சேரி உள்துறை அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் புதுச்சேரி காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், காவல்துறை பணியாளர்களின் குடும்பத்தினர், தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கண்டுகளித்தனர். சிறப்பான கட்டுப்பாடு மற்றும் துல்லியத்துடன் நடைபெற்ற அணிவகுப்பிற்கு அணிவகுப்பு தளபதி டாக்டர். வினய் குமார் கட்ஜ், ஐ.பி.எஸ், எஸ்.எஸ்.பி, (IPS, SSP) தலைமை தாங்கினார். டாக்டர். ரச்சனா சிங், பி.பி.எஸ் இரண்டாம் நிலை அணிவகுப்பு அதிகாரியாகவும், திரு. சுபம் சுந்தர் கோஷ், பி.பி.எஸ் கொடி ஏந்தும் அதிகாரியாகவும் செயல்பட்டனர். அணிவகுப்பில் புதுச்சேரி காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்றன. அவை காவல்துறை அணி (ஆண்கள்), காவல்துறை கமாண்டோ அணி, புதுச்சேரி ஆயுதப்படை காவல்துறை அணி, காவல்துறை அணி (பெண்கள்), போக்குவரத்து காவல்துறை அணி மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் (IRBn) அணி ஆகியவையாகும். புதுச்சேரி காவல்துறை இசைக்குழுவினரின் இசை முழக்கத்துடன் நடைபெற்ற அணிவகுப்பு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்கு மேலும் சிறப்பையும் கம்பீரத்தையும் சேர்த்தது. விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள், சிறப்பான நிர்வாகத் திறன், பணியில் சிறந்த செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையைப் பாராட்டும் வகையில், இரண்டு சிறப்பு காவல்துறை அதிகாரிகளான எஸ்.எஸ்.பி கலைவாணன், ஐ.பி.எஸ் மற்றும் எஸ்.எஸ்.பி லட்சுமி சௌஜன்யா, ஐ.பி.எஸ் ஆகியோருக்கு பெருமைமிகு கேந்திர உள்துறை அமைச்சர் தக்ஷதா பதக்கம் வழங்கினார். குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி வழங்கப்பட்டிருப்பது, புதுச்சேரி காவல்துறையின் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். இது மக்களுக்கு அர்ப்பணிப்புடன் ஆற்றிய நீண்டகால சேவைக்கும், காவல்துறையின் சிறப்பான பாரம்பரியத்திற்கும் கிடைத்துள்ள பெருமைக்குரிய அங்கீகாரமாகும். இந்த உயரிய கௌரவம், புதுச்சேரி காவல்துறையின் அனைத்து பணியாளர்களுக்கும் தொடர்ந்து ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளித்து, தொழில்முறை சிறப்பு, நேர்மை மற்றும் பொதுச்சேவையின் பங்காக அமையும்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சாதனைப் பாதையில் புதுச்சேரி காவல்துறை: அமித் ஷா வழங்கிய குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி
PulseNews சுருக்கம்

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக புதுச்சேரி காவல்துறை ஆற்றி வரும் சிறப்பான சேவை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் வழங்கிய ‘குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி’ விருது வழங்கப்பட்டுள்ளது. கோரிமேடு காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த உயரிய விருதை வழங்கினார். இதன் மூலம் நாட்டில் இந்த கௌரவத்தைப் பெறும் 18-வது மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் என்ற பெருமையை புதுச்சேரி பெற்றுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவின் ஒரு பகுதியாக, சிறப்பான சேவைக்காக எஸ்.எஸ்.பி கலைவாணன் மற்றும் எஸ்.எஸ்.பி லட்சுமி சௌஜன்யா ஆகியோருக்கு மத்திய அமைச்சர் தக்ஷதா பதக்கம் வழங்கி கௌரவித்தார். காவல்துறை பிரிவுகளின் அணிவகுப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, புதுச்சேரி காவல்துறையின் நீண்டகால சேவைக்கும் நேர்மைக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாக அமைந்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle