இந்தியாவிற்கு பணம் அனுப்ப புதிய யுபிஐ முறையை அறிமுகப்படுத்திய கத்தார்..!
இந்தியா - கத்தார் இடையே எல்லை தாண்டிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை முன்னெடுக்கும் நோக்கில், கத்தாரில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள UPI வசதி கொண்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. UPI மூலம் இயங்கும் PosTransfer சேவை, கத்தார் போஸ்ட், இந்தியா போஸ்ட், NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் உள்ளிட்டவற்றின் கூட்டு முயற்சியால் ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள், பெறுநரின் UPI ஐடி மற்றும் தேவையான விவரங்களை அளித்து கத்தார் போஸ்ட் விற்பனை நிலையங்களில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். ஒரு பரிவர்த்தனைக்கு 10 கத்தாரி ரியால் முதல் இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாயை கொண்ட 4,000 கத்தாரி ரியால் வரை பணம் அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இந்திய மதிப்பில் 392 ரூபாய் நிலையான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான எல்லை தாண்டிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை எளிதாக்கும் நோக்கில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கத்தாரில் உள்ள வாடிக்கையாளர்கள், இந்தியாவில் உள்ள யுபிஐ (UPI) வசதி கொண்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை அனுப்ப முடியும்.
இந்த 'PosTransfer' சேவை, கத்தார் போஸ்ட், இந்தியா போஸ்ட் மற்றும் என்பிசிஐ (NPCI) இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டது. பயனர்கள் பெறுநரின் யுபிஐ ஐடி மற்றும் தேவையான விவரங்களை வழங்குவதன் மூலம் இந்தப் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.