PulseNews
தொழில்நுட்பம்

சூரியனில் பூமியை விட 14 மடங்கு பெரிய கரும்புள்ளி: பூமியை நோக்கி திரும்பக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சூரியன் அதன் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய கரும் புள்ளிகளை தற்போது தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கரும் புள்ளிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, பூமியின் அளவை விட 14 மடங்கு அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கின்றன. இவை எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சூரியப் புள்ளிகள் என்றால் என்ன? சூரியப் புள்ளிகள் என்பவை சூரியனில் உள்ள செயலிலுள்ள பகுதிகளின் வெளிப்படையான பகுதிகளாகும். அவை, சூரியனின் மற்ற பகுதிகளை காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைந்த குளிர்ச்சியுடன் காட்சியளிக்கின்றன. தீவிரமான காந்தப்புலக் கோடுகள் உருவாவதன் விளைவாகவே இந்தப் புள்ளிகள் உருவாகின்றன. இந்தக் காந்தப்புலக்கோடுகள், வெப்பத்தை ஒளிக்கோளம் என்ற சூரியனின் வெளிப்படையான அடுக்கை அடைவதை தடுக்கின்றன. இந்தக் காந்தத் தடையாலேயே அந்தப் பகுதிகள் குளிர்ச்சியாகவும், கருமையாகவும் தெரிகின்றன. பூமிக்கு எதிராகத் திரும்பியிருக்கும் ராட்சதப் புள்ளி தற்போது பூமியை நோக்கியிருக்கும் இந்த பிரமாண்ட சூரிய புள்ளிக் குழுவானது 1,80,000 கிலோமீட்டர் அகலத்தைக் கொண்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் காணப்பட்ட மிகப்பெரிய புள்ளிகளில் ஒன்றாகும்.இந்த கரும் புள்ளிகளில் 5 புள்ளிகள், தனியாகவே பூமியை விடப் பெரியவை (பூமியின் விட்டம் 12,756 கி.மீ.). இது சன்ஸ்பாட் காம்ப்ளக்ஸ் 4294-96 என்றழைக்கப்படுகிறது. இது சூரியனின் தென் அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இது அவ்வளவு பிரமாண்டமானது என்பதால், ஒரே படத்தில் இதை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை.spaceweather.com தளத்தின்படி, ட்ரினிடாட்டை சேர்ந்த அமெச்சூர் வானியலாளர் அம்ரித் சீசரன் (Amrit Seecharan), இந்தக் குழுமத்தை முழுமையாக படம்பிடிக்க 2 சூரிய புகைப் படங்களை இணைக்க வேண்டியிருந்தது. செவ்வாயில் இருந்து வந்த முதல் செய்தி! இந்த ராட்சதச் சூரியப் புள்ளிக் குழுமத்தை முதலில் கண்டறிந்த பெருமை, செவ்வாய் கிரகத்தில் உள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவருக்கே சேரும். செவ்வாயின் ஜெசரோ பள்ளத்தில் உள்ள தூசி மேகங்களின் வழியாக, நவம்பர் மாதக் கடைசியில் ரோவர் தனது சிறப்பு கேமராக்கள் மூலம் இதைப் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இது உண்மையில் ஆபத்தா? சன்ஸ்பாட் காம்ப்ளக்ஸ் 4294-96, அதிகபட்ச சூரியப் பிழம்புகளை உருவாக்கும் ஆற்றல் கொண்ட பீட்டா-காமா-டெல்டா வகையை சேர்ந்தது. இது மிக நிலையற்றதாகவும், சிக்கலானதாகவும் இருப்பதால் ஆபத்து அதிகம். டிச.1-ம் தேதி, 2-வது சக்தி வாய்ந்த எக்ஸ்-2 வகை சூரியப் பிழம்பு வெடித்தது. முதலில் இதற்கு இந்த குழுதான் காரணம் என்று நினைத்தாலும், சூரியனின் வட அரைக்கோளத்தில் இருந்த, சிறியதாகவும் பாதிப்பு இல்லாததாகவும் தோன்றிய சூரியப் புள்ளி 4295தான் இதற்குக் காரணம் என்று பின்னர் தெரியவந்தது. பூமியில் ஏற்படும் விளைவுகள் இந்தச் சூரியப் பிழம்பு ஆஸ்திரேலியாவில் வானொலி Blackout-ஐ ஏற்படுத்தியது. மேலும், இது கொரோனல் மாஸ் எஜக்சன் (CME) அதாவது சூரியனில் இருந்து பிளாஸ்மா மற்றும் காந்தப் புலங்களின் மிகப்பெரிய வெடிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பல சூரியப் புள்ளிகள் இருப்பதால், உலகளாவிய வானொலி Blackout-களை ஏற்படுத்தி, வளிமண்டலத்தில் நீண்ட கால கதிர்வீச்சுப் புயல்களைத் தூண்டும் எக்ஸ்-பிழம்புகள் உருவாவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இந்தச் சூரியப் பிழம்புகள் ஒரு நல்ல பக்கத்தையும் கொண்டுள்ளன. X-பிழம்புகளால் ஏற்படும் புவிகாந்தப் புயல், வட துருவ வானத்தில் கண்கவர் அரோராக்களை (Aurora Borealis) உருவாக்கி, வானத்தை ஒளியூட்டும். சூரியச் சுழற்சி 25 எதிர்பார்ப்புகளை மீறிச் சக்திவாய்ந்ததாக மாறிவரும் நிலையில், இந்தக் 'கனமான' சூரியப் புள்ளிகள் நமது விண்மீனில் இன்னும் பல ஆச்சரியங்கள் எஞ்சியிருப்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சூரியனில் பூமியை விட 14 மடங்கு பெரிய கரும்புள்ளி: பூமியை நோக்கி திரும்பக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை
PulseNews சுருக்கம்

சூரியனில் தற்போது உருவாகியுள்ள கரும்புள்ளிகள் பூமியை விட 14 மடங்கு பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் காணப்படும் இந்த கரும்புள்ளிகள், எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சூரியனின் மேற்பரப்பில் மற்ற பகுதிகளை விடக் குளிர்ச்சியாகக் காணப்படும் இந்தச் செயல்திறன் மிக்க பகுதிகள், பூமியை நோக்கித் திரும்பும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology