Indian Railway: சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
<p><strong>Indian Railway Chennai Mumbai Howrah:</strong> அதிக அடர்த்தி கொண்ட ரயில் பாதையை நான்கு வழித்தடமாக மாற்ற ரயில்வே நிர்வாகத்தின் முடிவால், சென்னையிலிருந்து வட இந்தியாவிற்கான இணைப்பு மேலும் வலுவடைய உள்ளது.</p> <h2><strong>ரயில்வே நிர்வாகத்தின் 4 வழித்தட திட்டம்</strong></h2> <p>நாட்டின் மொத்த ரயில் போக்குவரத்தில் பெரும் பங்கை தங்கள் வசம் கொண்டுள்ள, அதிக அடர்த்தி மிக்க ரயில் நெட்வொர்க்கை நான்கு வழித்தடமாக மாற்றுவதற்கான ஒரு லட்சிய திட்டத்தில் இந்திய ரயில்வே முன்னேற்றம் கண்டு வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பெருநகரங்களையும் தேசிய தலைநகரான டெல்லியுடனும், மும்பை, சென்னை மற்றும் ஹவுரா போன்ற பிற முக்கிய நகரங்களுடனும் இணைக்கும் ஏழு அதிக அடர்த்தி கொண்ட ரயில் பாதைகள் இதில் அடங்கும். இவை ஆண்டு முழுவதும் பெருமளவிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை கையாள்கின்றன. குறிப்பிடத்தக்க 7 வழித்தடங்கள் கிட்டத்தட்ட 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்டவை ஆகும். மொத்த ரயில் போக்குவரத்தில் சுமார் 41 சதவிகித பங்களிப்பை அவை கொண்டிருந்தாலும், ரயில் நெட்வொர்க்கில் வெறும் 16 சதவிகிதத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளன.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/why-do-ants-suddenly-increase-in-the-house-tips-details-in-pics-272340" width="631" height="381" scrolling="no"></iframe></p> <h2><strong>ரயில் வழித்தடம் விரிவாக்கம் எதற்காக?</strong></h2> <p> நாடு முழுவதும் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு ஆதரவளிக்கவும், கொள்ளளவை அதிகரிக்கவும் இந்திய ரயில்வே தனது அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெட்வொர்க் முழுவதையும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது என மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகவும் பரபரப்பான சில வழித்தடங்களில் ரயில் சேவைகளை அதிகரிக்க உதவுவதோடு, ரயில் போக்குவரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/LZrnxQgEeUo?si=GN8krPqPMi18ftKP" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <h2><strong>7 வழித்தடங்கள் எவை?</strong></h2> <p>அடையாளம் காணப்பட்டுள்ள அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட ஏழு வழித்தடங்களில் டெல்லி–ஹவுரா, ஹவுரா–சென்னை, சென்னை–மும்பை, மும்பை–டெல்லி, டெல்லி–சென்னை, மும்பை–ஹவுரா மற்றும் டெல்லி–கவுஹாத்தி ஆகியவை அடங்கும். இந்த வழித்தடங்கள் நாட்டின் சில மிகப்பெரிய நகரங்களையும் பிராந்தியங்களையும் இணைக்கின்றன. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள ஏழு வழித்தடங்களில், டெல்லி–ஹவுரா மற்றும் டெல்லி–மும்பை ரயில் வழித்தடங்கள், மணிக்கு 160 கி.மீ. வரையிலான வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுவதற்கு வழிவகை செய்கின்றன. டெல்லி–ஹவுரா அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள வழித்தடத்தில் மட்டும், தினமும் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும், சுமார் 100 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. டெல்லி–மும்பை அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள வழித்தடத்தில், தினமும் 90-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும், சுமார் 80 முதல் 85 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.</p> <p><a title="CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?" href="https://tamil.abplive.com/news/politics/vijay-among-top-three-pm-choices-right-after-modi-and-rahul-gandhi-finds-motn-survey-tvk-politics-congress-shocks-272711" target="_self">இதையும் படியுங்கள்: CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?</a></p> <h2><strong>அடர்த்தியான, நீளமான வழித்தடங்கள்:</strong></h2> <p>டெல்லி–ஹவுரா அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடம் சுமார் 1,400 கி.மீ. தூரத்தையும், டெல்லி–மும்பை அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடம் ஏறத்தாழ 1,500 கி.மீ. தூரத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவை இரண்டும் இந்திய ரயில்வேயின் தங்க நாற்கரத்தின் இரண்டு முக்கிய மற்றும் மிகவும் பரபரப்பான வழித்தடங்களாகும். ஹவுரா–சென்னை வழித்தடம் சுமார் 1,653 கி.மீ. தூரத்தையும், டெல்லி–சென்னை அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட வழித்தடமாக சுமார் 2,174 கி.மீ. தூரத்திற்கு நீள்கிறது. சென்னை–மும்பை வழித்தடம் சுமார் 1,289 கி.மீ. தூரத்தைக் கொண்டுள்ளது. இந்திய ரயில்வே நெட்வொர்க் ஒட்டுமொத்தமாக தினமும் சுமார் 25,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.</p> <h2><strong>சென்னைக்கான இணைப்பு மேம்படும்..</strong></h2> <p>சென்னையிலிருந்து வெளியே செல்லும் உள்ளூர் மற்றும் வெளி ஊர்ப் போக்குவரத்தைக் கையாளுகிறது. மத்திய மகாராஷ்டிராவின் போக்குவரத்து மையங்களை இணைக்கிறது. கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லைக்குள் பயணிக்கிறது. குண்டக்கல் ரேணிகுண்டா போன்ற முக்கிய தெற்கு உள்துறை சந்திப்புகளை இணைக்கிறது. இதேபோன்று சென்னையிலிருந்து ஹவுரா மற்றும் டெல்லியை நோக்கி இயக்கப்படும் ரயில்கள் நகரங்களுக்கு இடையேயான இணைப்பு, சுற்றுலா மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் சென்னையில் இருந்து டெல்லி, ஹவுரா மற்றும் மும்பைக்கு இயக்கப்படும் ரயில்களின் சராசரி வேகத்தை மேம்படுத்தவும், தாமதங்களைக் குறைக்கவும், ரயில் இருப்பு பாதையை நான்கு வழித்தடமாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.</p>

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட ரயில் பாதைகளை நான்கு வழித்தடங்களாக மாற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த லட்சியத் திட்டம் நிறைவேறினால், சென்னை முதல் மும்பை, ஹவுரா மற்றும் டெல்லி வரையிலான ரயில் பயணங்கள் மிகவும் எளிமையாகும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம், சென்னையிலிருந்து வட இந்தியாவிற்கான ரயில் இணைப்பு முன்பை விட வலுவடையும். அதிக அடர்த்தி கொண்ட ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவதன் வாயிலாக, நாட்டின் ரயில் போக்குவரத்து சேவையை மேலும் சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.