நாடு கடத்தல் முயற்சியில் இருந்து தப்பிய இந்தியர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்
கர்நாடகாவில் பிறந்த தொழில்நுட்பத் தொழில்முனைவோர் சைமன் ஷெட்டி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக குடியேற்றச் சிக்கல்கள், தொழில் ரீதியான பின்னடைவை சந்தித்தார். அத்துடன் தன்னை நாடு கடத்த முயன்றதாகக் கூறப்படும் பொய்யான புகாரை எதிர்கொண்ட நிலையில், அதிலிருந்து விடுதலை பெற்று தற்போது அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் பிறந்த தொழில்நுட்பத் தொழில்முனைவரான சைமன் ஷெட்டி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாகக் குடியேற்றச் சிக்கல்களையும் தொழில் ரீதியான பின்னடைவுகளையும் எதிர்கொண்டு வந்தார். மேலும், அவர் மீது சுமத்தப்பட்ட நாடு கடத்தும் முயற்சியுடன் கூடிய பொய்யான புகாரால் பல நெருக்கடிகளைச் சந்தித்து வந்தார்.
தற்போது அந்தப் புகார்களிலிருந்து அவர் முழுமையாக விடுதலையாகியுள்ளார். இந்த சட்டப் போராட்டங்களை வெற்றிகரமாக முடித்து, சைமன் ஷெட்டி அதிகாரப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளார்.