தேசிய செவிலியர் ஆணையத்தை 2 மாதத்தில் அமைக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்திய தொழில்முறை செவிலியர் சங்கம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையச் சட்டம்’ மத்திய அரசால் 2024 பிப்ரவரி 29 அன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இந்திய தொழில்முறை செவிலியர் சங்கம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், கடந்த பிப்ரவரி 29, 2024 அன்று மத்திய அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேசிய செவிலியர் ஆணையத்தை வரும் இரண்டு மாதங்களுக்குள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.