ரில்வின் சில்வாவை சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர்
ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர்ரில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, பெலவத்தையில் உள்ள ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான தூதரக மற்றும் கலாசார உறவுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், இந்தியாவில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. சந்தி...

ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா பெலவத்தையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கை இடையிலான தூதரக மற்றும் கலாசார உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.