இந்தியன் வங்கியில் 2500 பேருக்கு வேலைவாய்ப்பு: காத்திருப்போருக்கு நற்செய்தி! விவரம் இதோ.
<p style="text-align: justify;">வங்கிப் பணிக்காக காத்திருக்கு நபர்களுக்கு ஓர் நற்செய்தி வந்துள்ளது. 2500 பேருக்கு இந்தியன் வங்கியில் வேலை ரெடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய வங்கி துறை ஏஐ, டிஜிட்டல் சேவை, ஆட்டோமேஷன் மூலம் பல முக்கிய சேவைகளை எளிதாக்கிய காரணத்தால் வங்கிகள் தற்போது தனது வர்த்தகத்தை மிக குறைவான செலவில் வர்த்தகக்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. புதிய,புதிய பகுதிகளில் வர்த்தகத்தை கொண்டு செல்கிறது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/31/9b16b992a80d8d4684f3160d5a98eb2b1788142926565193_original.JPG" /></p> <p style="text-align: justify;">அந்த வகையில் 1907 ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்டு, 1969 முதல் இந்திய அரசின் கட்டப்பாட்டில் இயங்கி வரும் இந்தியன் வங்கி நடப்பு நிதியாண்டுக்குள் 100 புதிய வங்கி வங்கி கிளைகளை திறக்க முடிவு செய்துள்ளது. இந்த முறை தனது விரிவாக்கத்தை தென்னிந்தியாவை தாௌண்டி மத்திய மற்றும் மேற்கு பகுதியில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு சுமார் 2500 பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்க உள்ளது.</p> <p style="text-align: justify;">இந்த 2500 ஊழியர்கள் புதிதாக திறக்கப்படும் வங்கி கிளைக்கு மட்டும் அல்லாமல் புதிய வர்த்தக பிரிவு, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பதிலாக நிரப்பவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த ஆண்டு 100 வங்கி கிளைகளை திறந்தது போல் இந்த ஆண்டும் இதேபோன்ற இலக்கை வைத்துள்ளதாகவும், மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 15 புதிய கிளைகளை திறக்கப்பட்டதாகவும்,ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 6003 வங்கி கிளைகளும், வெளிநாடுகளில் சிங்கப்பூர், கொலும்பு, ஜாப்னா ஆகிய பகுதிகளில் 3 கிளைகளும், 41,875 ஊழியர்களை வைத்து இயங்கி வருகிறது.</p> <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/31/339bed87782b48699e60c495a1af9a3e1788142850900193_original.jpg" /></p> <p style="text-align: justify;">இந்தியாவில் 7வது பெரிய வங்கியாக இருக்கும் இந்தியன் வங்கி, 2020 அலகாபாத் வங்கியை இணைத்து மூலம் கிழக்கு மற்றும் உத்தர பிரதேசத்தில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்த நிலையில் தற்போது மத்திய மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் விரிவாக்கம் செய்த தயாராகியுள்ளது.</p> <p style="text-align: justify;">மற்ற வங்கிகளை போலவே இந்தியன் வங்கியும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்க நகை கடன் போர்ட்போலியோ 1.5 லட்சம் கோடி வரையில் அதிகரிக்கும் என கணக்கிட்டு உள்ளது. இதேபோல் இவ்வங்கியிஸ் வாராக் கடன் 1.5 -1.6 சதவீகமாக உள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.இந்திய வங்கி பங்கு விலை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 0.80 சதவீதம் சரிந்து 877.35 ரூபாயாக உள்ளது, 2026ஆம் ஆண்டில் 8 மாத காலத்தில் 5.37 சதவீதம் உயர்ந்துள்ளது.</p>

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 2,500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கிப் பணிக்காகத் தயாராகி வருபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களின் உதவியால், வங்கிகள் தங்களது வர்த்தகத்தை மிகக் குறைந்த செலவில் விரைவாக விரிவாக்கம் செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, புதிய பகுதிகளில் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த வேலைவாய்ப்புகளை வங்கி உருவாக்கியுள்ளது.