Mumbai 3.0: மும்பைக்கு அருகே 4 ஆயிரம் கோடியில் புதிய நகரம்.. மகாராஷ்டிரா அரசின் மெகா பிளான்
One India15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →மும்பையில் இட நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், சொத்துக்களின் மதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருவதாலும் இந்த சூழலை எதிர்கொள்ள மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நவி மும்பைக்கு அருகில் 'மும்பை 3.0' என்ற பெயரில் புதிய நகரத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மெகா திட்டத்தை செயல்படுத்த மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த புதிய நகரம் உருவாக்கப்பட உள்ளது.
#business