நேபாளம் வெள்ளம்; சேரும் சகதியுமாக 3 நாட்களாக சிக்கி இருந்த சிறுமி – பத்திரமாக மீட்பு ...
காத்மாண்டு, கடந்த மூன்று நாட்களாக இடிபாடுகளுக்கு நடுவே மண்ணுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாளத்தில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மண் மற்றும் இடிபாடுகளுக்குள் நடுவே சிக்கி புதைந்திருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து அப்பகுதியில் [...] The post நேபாளம் வெள்ளம்; சேரும் சகதியுமாக 3 நாட்களாக சிக்கி இருந்த சிறுமி – பத்திரமாக மீட்பு ... appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே பகுதியில், கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் கடும் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கிய 6 வயது சிறுமி ஒருவர், இடிபாடுகள் மற்றும் மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.
மூன்று நாட்களாக மண்ணுக்குள் சிக்கியிருந்த அந்த சிறுமியை, மீட்புக் குழுவினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் மீட்கப்பட்ட இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.