PulseNews
தொழில்நுட்பம்

செத்துப் போனதாக நினைத்த புளூட்டோ இன்னும் உயிரோடு இருக்கிறதா? 2015-ல் எடுத்த புகைப் படங்கள் சொன்ன உண்மை:

கடந்த 2015-ஆம் ஆண்டு நாசாவின் 'நியூ ஹரைசன்ஸ்' (New Horizons) விண்கலம் புளூட்டோ மிக அருகில் கடந்து சென்றபோது எடுத்த புகைப்படங்கள், இன்றளவும் விஞ்ஞானிகளுக்குப் புதிய ஆச்சரியங்களை வழங்கி வருகின்றன. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் புகைப்படங்களை விரிவாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள், புளூட்டோவில் திரவ நைட்ரஜன் பனிப் பிளவுகள் வழியாக மேற்பரப்பிற்கு எழும்பி வருவதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வின் மையம், புளூட்டோவின் மேற்பரப்பில் அமைந்துள்ள 'ஸ்புட்னிக் பிளானிஷியா' (Sputnik Planitia) என்ற பிரம்மாண்டமான இதய வடிவிலான நைட்ரஜன் பனிப்பாறை மண்டலமாகும். அமெரிக்காவின் இரண்டு பெரிய மாநிலங்களை இணைத்தால் எவ்வளவு பரப்பளவு வருமோ, அதைவிடப் பெரிய இந்த உறைந்த பகுதியில் கருமை நிறக் கோடுகளும் படலங்களும் தென்படுகின்றன. பூமியில் உள்ள பனிப்பாறைகளில் மழை பெய்யும்போதோ அல்லது அடியிலிருந்து நீர் கசியும்போதோ எப்படிப்பட்ட வடிவங்கள் உருவாகுமோ, அதேபோன்ற அமைப்புகள் புளூட்டோவிலும் காணப்படுகின்றன. ஆனால், புளூட்டோவில் நிலவும் உறைபனி குளிருக்கு அங்கு மழை பெய்ய வாய்ப்பே இல்லை. இதனால், பனிப்பாறைக்கு அடியில் உறைந்திருக்கும் நைட்ரஜன் உருகி, அடியிலிருந்து மெதுவாக மேலே கசிந்து வருகிறது என்பதே இதற்கான ஒரே விளக்கமாக விஞ்ஞானிகளால் முன்வைக்கப்படுகிறது. நாசாவின் 'நியூ ஹொரைசன்ஸ்' (New Horizons) விண்கலம் எடுத்த படங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வண்ணப் படத்தொகுப்பில், புளூட்டோவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 'ஸ்புட்னிக் பிளானிஷியா' (Sputnik Planitia) பனிப்பாறை இங்கே காட்டப்பட்டுள்ளது. (படம்: நாசா) நாசாவின் நியூ ஹரைசன்ஸ் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் ஆலன் ஸ்டெர்ன் இது பற்றிக் கூறுகையில், "புளூட்டோ நம்மை வியப்பில் ஆழ்த்துவதை என்றுமே நிறுத்துவதில்லை. அதன் மேற்பரப்பில் சமீப காலத்தில் திரவம் பாய்ந்திருப்பதோடு, புளூட்டோவில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார். சூரியனிலிருந்து கிட்டத்தட்ட 600 கோடி கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தாலும், புளூட்டோ முற்றிலும் உறைந்துபோன ஒரு செத்த கோள் அல்ல; அது இன்னமும் புவியியல் ரீதியாக உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு விசித்திர உலகம் என்பதை இந்த கண்டுபிடிப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
செத்துப் போனதாக நினைத்த புளூட்டோ இன்னும் உயிரோடு இருக்கிறதா? 2015-ல் எடுத்த புகைப் படங்கள் சொன்ன உண்மை:

கடந்த 2015-ஆம் ஆண்டு நாசாவின் 'நியூ ஹரைசன்ஸ்' (New Horizons) விண்கலம் புளூட்டோ மிக அருகில் கடந்து சென்றபோது எடுத்த புகைப்படங்கள், இன்றளவும் விஞ்ஞானிகளுக்குப் புதிய ஆச்சரியங்களை வழங்கி வருகின்றன. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் புகைப்படங்களை விரிவாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள், புளூட்டோவில் திரவ நைட்ரஜன் பனிப் பிளவுகள் வழியாக மேற்பரப்பிற்கு எழும்பி வருவதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வின் மையம், புளூட்டோவின் மேற்பரப்பில் அமைந்துள்ள 'ஸ்புட்னிக் பிளானிஷியா' (Sputnik Planitia) என்ற பிரம்மாண்டமான இதய வடிவிலான நைட்ரஜன் பனிப்பாறை மண்டலமாகும். அமெரிக்காவின் இரண்டு பெரிய மாநிலங்களை இணைத்தால் எவ்வளவு பரப்பளவு வருமோ, அதைவிடப் பெரிய இந்த உறைந்த பகுதியில் கருமை நிறக் கோடுகளும் படலங்களும் தென்படுகின்றன. பூமியில் உள்ள பனிப்பாறைகளில் மழை பெய்யும்போதோ அல்லது அடியிலிருந்து நீர் கசியும்போதோ எப்படிப்பட்ட வடிவங்கள் உருவாகுமோ, அதேபோன்ற அமைப்புகள் புளூட்டோவிலும் காணப்படுகின்றன. ஆனால், புளூட்டோவில் நிலவும் உறைபனி குளிருக்கு அங்கு மழை பெய்ய வாய்ப்பே இல்லை. இதனால், பனிப்பாறைக்கு அடியில் உறைந்திருக்கும் நைட்ரஜன் உருகி, அடியிலிருந்து மெதுவாக மேலே கசிந்து வருகிறது என்பதே இதற்கான ஒரே விளக்கமாக விஞ்ஞானிகளால் முன்வைக்கப்படுகிறது. நாசாவின் 'நியூ ஹொரைசன்ஸ்' (New Horizons) விண்கலம் எடுத்த படங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வண்ணப் படத்தொகுப்பில், புளூட்டோவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 'ஸ்புட்னிக் பிளானிஷியா' (Sputnik Planitia) பனிப்பாறை இங்கே காட்டப்பட்டுள்ளது. (படம்: நாசா) நாசாவின் நியூ ஹரைசன்ஸ் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் ஆலன் ஸ்டெர்ன் இது பற்றிக் கூறுகையில், "புளூட்டோ நம்மை வியப்பில் ஆழ்த்துவதை என்றுமே நிறுத்துவதில்லை. அதன் மேற்பரப்பில் சமீப காலத்தில் திரவம் பாய்ந்திருப்பதோடு, புளூட்டோவில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார். சூரியனிலிருந்து கிட்டத்தட்ட 600 கோடி கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தாலும், புளூட்டோ முற்றிலும் உறைந்துபோன ஒரு செத்த கோள் அல்ல; அது இன்னமும் புவியியல் ரீதியாக உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு விசித்திர உலகம் என்பதை இந்த கண்டுபிடிப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology