ஓலா, ஊபர் செயலிகளில் முன்பண 'டிப்ஸ்' கேட்க மத்திய அரசு தடை..!
ஓலா, ஊபர், ராபிடோ செயலிகளில் பயணம் தொடங்கும் முன்பே 'டிப்ஸ்' (Tip) கேட்கும் வசதியை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களை புக்கிங் செய்யும் போதோ அல்லது டிரைவர் சவாரியை ஏற்றுக்கொள்வதற்கு முன்போ கூடுதல் கட்டணம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. "கூடுதல் தொகை கொடுத்தால் வண்டி விரைவில் கிடைக்கும்" என்பது போன்ற வாசகங்களைச் செயலியில் காட்டுவது மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. சவாரி முழுமையாக முடிந்த பிறகே, வாடிக்கையாளரின் விருப்பத்தின் அடிப்படையில் கூடுதல் தொகை வழங்கும் வசதி இருக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ போன்ற வாடகை வாகன செயலிகளில், பயணம் தொடங்குவதற்கு முன்பே வாடிக்கையாளர்களிடம் 'டிப்ஸ்' கோரும் வசதியை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆட்டோ, கார் மற்றும் பைக் பயணங்களை முன்பதிவு செய்யும்போதோ அல்லது ஓட்டுநர் சவாரியை ஏற்பதற்கு முன்போ கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் பணம் செலுத்தினால் வாகனம் விரைவாகக் கிடைக்கும் என்ற ரீதியிலான வாசகங்களைக் காட்டுவது, மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவாரி முழுமையாக நிறைவடைந்த பிறகு மட்டுமே வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் கூடுதல் தொகையை வழங்க அனுமதிக்க வேண்டும்.