10M உயர திடீர் வெள்ளத்தால் உருக்குலைந்த நாடு: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் நிலச்சரிவு காரணமாகப் போட்கோஷி ஆற்றில் உருவான 8 முதல் 10 மீற்றர் உயரமான பெரும் வெள்ள அலைகள் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றி...

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் நிலச்சரிவு காரணமாக, 8 முதல் 10 மீட்டர் உயரமான பிரம்மாண்ட வெள்ள அலைகள் உருவெடுத்துள்ளன. இந்தச் சீற்றத்தினால் ஆற்றுப் பகுதியில் இருந்த பல கட்டடங்களும் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த இயற்கை அனர்த்தத்தினால் அங்குள்ள இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.