ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் “பல குழுக்களுக்கு தொடர்பு” புதிய சந்தேகத்தை எழுப்பிய பகுஜன் சமாஜ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது மனைவியும் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளருமான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்து மேற்கொண்ட சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விளக்கம் அளித்தனர். காவல்துறை தாக்கல் செய்த 5,000 பக்க குற்றப்பத்திரிகை முழுமையானதாக இல்லை என்றும், கொலைக்கு பின்னால் மூன்று குழுக்கள் மட்டுமின்றி பல குழுக்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். வழக்கின் காவல்துறை விசாரணை, திருவேங்கடம் என்கவுண்டர், வங்கி பணப்பரிமாற்றங்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கேள்வி எழுப்பினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, அவரது மனைவியும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மேற்கொண்டு வரும் சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விளக்கமளித்தனர்.
காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை முழுமையானதாக இல்லை என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த கொலையில் மூன்று குழுக்கள் மட்டுமின்றி, மேலும் பல குழுக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற புதிய சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.