இந்தியா-ஜப்பான் இடையே வரலாற்று சிறப்புமிக்க டி20 கிரிக்கெட் போட்டி: சுசுகி கோப்பை அறிவிப்பு
இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் வரலாற்றில் முதன்முறையாக டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் புதிய தொடக்கமாகக் கருதப்படும் இந்தப் போட்டி, இரு ந…

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் வரலாற்றில் முதன்முறையாக டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் புதிய தொடக்கமாகக் கருதப்படும் இந்தப் போட்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், தூதரக உறவின் 75-வது ஆண்டு விழாவையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டிக்கு 'சுசுகி கோப்பை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க ஒற்றைப் போட்டி 2026-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் இந்த இரு அணிகளும் முதல்முறையாகக் களமிறங்குவது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.