ஆபாச உடை அணிந்தால் சிறை தண்டனை...! கோவில் விழா ஆடல் பாடலுக்கு கடும் தடை! மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடைபெற உள்ள கோவில் திருவிழாவில் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாசமான உடைகள் அணிந்து நடனம் ஆடினால், அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். உடையார்பாளையம் பகுதியில் உள்ள பாப்பாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இந்நிகழ்ச்சிகளுக்கு காவலர்கள் அனுமதி வழங்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது கரகாட்ட நிகழ்ச்சிகளில் இடம்பெறும் நடனங்களின் தன்மை மற்றும் கலைஞர்களின் ஆடை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். குறிப்பாக, பெண்கள் அணியும் ஆடைகள் ஆபாசமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதுபோன்ற நடன நிகழ்ச்சிகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு காவலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆபாச நடனங்கள் மட்டுமின்றி, நிகழ்ச்சியின்போது அரசியல் சார்ந்த முழக்கங்கள் எழுப்பப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இதையடுத்து, அரசியல் கருத்துகளை தெரிவிப்பதற்கும் முழக்கங்களை எழுப்புவதற்கும் நாட்டில் அனைவருக்கும் உரிமை இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டார். அந்த உரிமை உடையார்பாளையம் பகுதி மக்களுக்கும் இருப்பதாக தெரிவித்த அவர், அதே நேரத்தில் ஆபாசமான நடனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்க முடியாது என்று தெளிவுபடுத்தினார்.மனுதாரர் தரப்பில், கரகாட்டம் என்பது பல ஆண்டுகளாக கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி என்றும், அதனை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் நடைபெற்ற இதுபோன்ற நிகழ்ச்சிக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த ஜூன் மாதம் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான நீதிமன்ற உத்தரவு நகலும் தாக்கல் செய்யப்பட்டது.அந்த உத்தரவைப் பரிசீலித்த நீதிபதி, ஏற்கனவே இதேபோன்ற நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டினார். இதையடுத்து, இன்று தொடங்க உள்ள உடையார்பாளையம் கோவில் திருவிழாவிலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.அதேவேளை, நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்கள் ஆபாசமான உடைகளை அணிந்து நடனம் ஆடக்கூடாது என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெற்றால் உடையார்பாளையம் காவலர்கள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், ஆபாசமான நடனம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்தால், அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். அந்த ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் கடுமையாக எச்சரித்தார். இதன் மூலம் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கினாலும், அவற்றில் ஆபாசம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு இடமளிக்கக்கூடாது என்பதை சென்னை ஐகோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள பாப்பாத்தம்மன் கோயில் திருவிழாவில், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகளின் போது ஆபாசமான உடைகள் அணிந்து நடனமாடக் கூடாது என நீதிபதி எச்சரித்துள்ளார். மீறல்கள் நிகழ்ந்தால், ஆதாரங்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.