கூட்டணியைப் பிரிக்கச் சதியா?.. “போலி கருத்துக்கணிப்புகள் பிரித்தாளும் ஆயுதம்”.. நரி கதை சொன்ன மாணிக்கம் தாகூர் எம்பி!
Manickam Tagore Kutty Story: 2029 பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்துக்கணிப்புகள் வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் 'நரியின் போலி கருத்துக்கணிப்பு' என்ற குட்டிக்கதையைப் பகிர்ந்துள்ளார். போலி சர்வேக்கள் கூட்டணியைப் பிரிக்கும் ஆயுதம் என எச்சரிக்கும் அவரது பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2029-ஆம் ஆண்டுக்கான பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துக்கணிப்புகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் நரியின் குட்டிக்கதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இத்தகைய போலி கருத்துக்கணிப்புகள் அரசியல் கூட்டணியைப் பிரிப்பதற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் எச்சரித்துள்ளார். அவரது இந்த பதிவு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பினை உருவாக்கியுள்ளது.