காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு விசேட மாநாடு...! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான் ஆனால் அதைவிட எமக்கு நீதியே மிக முக்கியமானது என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு எனவும் நீதி கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இன்று (26-08-2026) விசேட ஊடகவியலாளர் சந்திபொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இன்று (26-08-2026) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.
நிதி உதவி தமக்குத் தேவை என்றாலும், அதைவிட நீதி கிடைப்பதே தங்களின் முதன்மை இலக்கு என்று அவர் குறிப்பிட்டார். நீதி கிடைத்த பின்னரே தாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் என்றும் அவர் தனது கோரிக்கையை முன்வைத்தார்.