PulseNews
அரசியல்

தமிழகத்தில் இப்போது மக்களவைத் தேர்தல் நடந்தால் தவெக–காங்கிரஸ் கூட்டணிக்கு 28 இடங்கள்? வெளியான கருத்துக்கணிப்பு!

இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய ‘Mood of the Nation’ கருத்துக்கணிப்பின் தமிழகத்துக்கான முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், தமிழகத்தின் 39 தொகுதிகளில் தவெக–காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களையும், திமுக கூட்டணி 11 இடங்களையும் கைப்பற்றும் என இந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை நடத்தப்படும் இந்த ‘Mood of the Nation’ சர்வேயின் சமீபத்திய ஆய்வு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியிலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது ஏற்கனவே தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி முதலிடத்திலும், ராகுல் காந்தி இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை பின்னுக்குத் தள்ளி விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய மாநிலங்களுக்கான சர்வே முடிவுகளில் தமிழகத்தின் தேர்தல் கணக்கும் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தவெக–காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களிலும், திமுக கூட்டணி 11 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘Mood of the Nation’ சர்வேயுடன் ஒப்பிடும்போது இந்த முடிவுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போது திமுக–காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களிலும், என்டிஏ கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள கூட்டணி மாற்றங்களே இந்த வித்தியாசத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிபிஎம், சிபிஐ மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக பக்கம் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், திமுக புதிய கூட்டணி அமைப்புடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே திமுக–பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. எனவே, தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் சூழ்நிலையின் ஒரு கட்டத்தை மட்டுமே பிரதிபலிப்பதாகவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி மாற்றங்கள் மற்றும் மக்கள் மனநிலைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கைகள் மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவெக–காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களை கைப்பற்றும் என்ற இந்த கணிப்பு, தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடு உருவாகியுள்ளதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுவதால், அடுத்த ஆறு மாதங்களில் தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Seithipunal16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழகத்தில் இப்போது மக்களவைத் தேர்தல் நடந்தால் தவெக–காங்கிரஸ் கூட்டணிக்கு 28 இடங்கள்? வெளியான கருத்துக்கணிப்பு!
PulseNews சுருக்கம்

இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பின் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, தற்போது மக்களவைத் தேர்தல் நடந்தால் தமிழகத்தின் 39 தொகுதிகளில் தவெக-காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பின் தரவுகளின்படி, மீதமுள்ள 11 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வின் சமீபத்திய முடிவுகள் தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics