கார்கே பங்கேற்ற கூட்டத்துக்குப் பின் ‘சுத்திகரிப்பு’: பாஜக மீது வழக்கு பதிவு செய்ய ராகுல் வலியுறுத்தல்
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், கடந்த 8-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10-ம் தேதி அந்த மைதானத்தில் வலதுசாரி அமைப்பினர் மற்றும் பாஜக - ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் ‘சுத்திகரிப்பு’ (புனிதப்படுத்தும்) சடங்குகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 10-ம் தேதி அதே மைதானத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரி அமைப்பினர் 'சுத்திகரிப்பு' சடங்குகளை நடத்தியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.