திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தினமும் வி.ஐ.பி.கள் விரைவு தரிசனம் செய்வதால் பொது தரிசன வழியாக வரும் தாங்கள் விரைவாக தரிசிக்க முடிவதில்லை என அமைச்சர் ரமேஷிடம் பக்தர்கள் முறையிட்டனர். கோயிலிலுக்கு முதல் முறை ஆய்வுக்கு வந்துள்ளதாகவும், அனைத்தையும் சரி பார்த்து உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும் பக்தர்களிடம் அவர் உறுதி அளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது வி.ஐ.பி.களுக்கான விரைவு தரிசன வசதியால், பொது தரிசன வரிசையில் வரும் தங்களுக்கு காலதாமதம் ஏற்படுவதாக பக்தர்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.
கோவிலுக்கு முதன்முறையாக ஆய்வுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், பக்தர்களின் புகார்களைக் கேட்டறிந்தார். முறையான ஆய்வு மேற்கொண்டு, அனைத்து குறைகளையும் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் பக்தர்களிடம் உறுதி அளித்தார்.