ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனில் பயங்கர தாக்குதல்!
ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 258 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த இரவுநேரத் தாக்குதல்களை உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் பகுதியளவு முறியடித்துள்ளதாக தெரியவருகிறது. பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் நடத்தப்பட்ட இத்...

ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் 258 ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் மீது நீண்ட நேரம் தீவிரமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் உக்ரைனின் துறைமுகங்கள், தொழில்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை ரஷ்யா குறிவைத்துள்ளது.
தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை நோக்கி பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு இந்த இரவுநேரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் பகுதியளவு முறியடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.