PulseNews
அரசியல்

ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு பதிலடி...! விஜய் பிரதமர் வேட்பாளரா...? கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார் வெளியிட்ட பரபரப்பு தகவல்...!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேஷ் குமார், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்து விளக்கம் அளித்தார்.அவர் கூறியதாவது,"தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருப்பது அவரது அரசியல் பார்வை. ஆனால், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எங்களுடைய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ராகுல் காந்தி மீதுதான் உள்ளது. 2029-ஆம் ஆண்டு ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பார் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. த.வெ.க. சார்பில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் போகிறார்களா என்பது குறித்து தற்போது வெளியாகும் அரசியல் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து மக்களுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 59 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக, வாக்குச்சாவடி அளவில் கட்சியை கட்டமைப்பதற்கும், தொண்டர்களை ஒருங்கிணைப்பதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை தயார்படுத்தி வருகிறோம். தேர்தலில் கைச்சின்னம் வெற்றிபெறும் வகையில் களப்பணிகள் தீவிரப்படுத்தப்படும். ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்ற எங்களது நிலைப்பாட்டை த.வெ.க. நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது” என அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு பதிலடி...! விஜய் பிரதமர் வேட்பாளரா...? கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார் வெளியிட்ட பரபரப்பு தகவல்...!
PulseNews சுருக்கம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்குப் பதிலளித்தார். இது குறித்த ஆதவ் அர்ஜுனாவின் கருத்து அவருடைய சொந்த அரசியல் பார்வை என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாறுபடவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். தங்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ராகுல் காந்தி மீது மட்டுமே இருப்பதாகவும், 2029-ம் ஆண்டில் ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics