2020க்கு முன் தமிழகத்தில் போதை கலாச்சாரம் இல்லை: திமுக தோற்றதற்கு இதுவே காரணம்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையிலான வாதங்கள் காரசாரமாக சென்றது பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக போதைப் பொருள் வழக்குகள் குறித்து பட்டியலிட்டார். இதற்கிடையில் தவெகவினர் அனைவரும் அவையில் எழுந்தால் எதிர்க்கட்சிகள் பேசவே முடியாது எனக் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
2020-ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் இருந்ததில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். திமுக தேர்தலில் தோல்வியடைந்ததற்கான முக்கியக் காரணம் இதுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது போதைப் பொருள் தொடர்பான வழக்குகளைப் பட்டியலிட்ட அமைச்சர், தவெக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்தால் எதிர்க்கட்சிகளால் பேச முடியாது என்று கூறியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.