PulseNews
அரசியல்

தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி

<p><span data-subtree="aimfl,mfl" data-copy-service-computed-style="font-family: "Google Sans", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);">தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் படிக்க ரூ.36 லட்சம் வரை நிதி உதவி வழங்கும் திட்டமே </span><strong class="rQesXe MPyX" data-sfc-cp="" data-sfc-root="ep" data-copy-service-computed-style="font-family: "Google Sans", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);">அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம்<!--TgQPHd|||[]--></strong> ஆகும். இத்திட்டத்தின் கீழ் கல்விக்கட்டணம், விமானப் பயணம் மற்றும் இதர செலவுகள் முழுமையாக வழங்கப்படுகின்றன.</p> <p>இந்த நிலையில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நடப்பாண்டில் அதிகரித்து இருப்பதாக <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் அத்திட்டத்தின் கீழ் 2025 - 2026-ஆம் கல்வியாண்டில், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கைப் பெற்று பயின்றுவரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p> <p>இதுகுறித்து மாணவர் பேசி வெளியிட்ட வீடியோவை வெளியிட்ட முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேலும் கூறி உள்ளதாவது:</p> <p>ஏற்கனவே, இங்கிலாந்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பட்டமேற்படிப்புக்கு சேர நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ள நம் மாணவர்களுக்கு ‘மாநில அரசின் கல்வி உதவித்தொகையை ஏற்க முடியாது - இந்திய ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்’ என்ற புதிய விதியை சுட்டிக்காட்டி சேர்க்கை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. </p> <h2><strong>இடைநிற்றல் ஏற்படும் சூழல்</strong></h2> <p>அந்த புதிய விதிக்கான காரணமாக கல்வி நிறுவனங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் “மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் அமைப்பு, அதனை இடையிலேயே நிறுத்திவிட்டால் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை உருவாகிறது; எனவே இடைநிற்றல் ஏற்படும் சூழலும் ஏற்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>அதன்படி பார்த்தால், மலேசியா நாட்டில் பயிலும் நம்முடைய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தாமல் த.வெ.க அரசு அலட்சியமாக இருப்பதால், அங்கும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசின் கல்வி உதவித்தொகையை நேரடியாக ஏற்க உயர்கல்வி நிறுவனங்கள் மறுக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. </p> <h2><strong>எத்தனை நாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதிப்பு?</strong></h2> <p>இன்னும் இதுபோல எத்தனை நாடுகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்கிற கேள்வியும் எழுகிறது.</p> <p>Take Diversion அரசின் இத்தகைய அலட்சியப்போக்கு, அரசின் உதவித்தொகையை மட்டுமே நம்பி கல்விக்காக கடல் கடந்து சென்றுள்ள மாணவர்களுக்கு எத்தகைய மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.</p> <p>அலட்சியப் போக்கினை கைவிட்டு, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உரிய காலத்தில் விடுவிக்க முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.</p> <p>இவ்வாறு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். </p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/which-cancer-is-more-common-in-men-271521" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
PulseNews சுருக்கம்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தலா ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் தகுதியான தலித் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி கட்டணத்தை அரசு இன்னும் செலுத்தவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். தலித் மாணவர்களை இலக்கு வைத்து இத்தகைய தாமதம் நடைபெறுகிறதா என்றும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics