“அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவில் இணைய தயார்!”.. பரபரப்பை கிளப்பிய அமைச்சர் செங்கோட்டையன்!!
KA Sengottaiyan Slams DMK and ADMK: தவெக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது செல்வாக்கை இழந்து தடுமாறி வருவதாகச் சாடினார். மக்கள் விரும்பிய அரசியல் மாற்றமாகத் தவெக உருவெடுத்துள்ளதாகவும், வரும் காலத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராவார் என்றும் அவர் முழங்கினார்.

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது செல்வாக்கை இழந்து தடுமாறி வருவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். தவெக கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றமாக தவெக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று அவர் முழங்கினார். மேலும், அதிமுகவைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் தவெகவில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறி அவர் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.