PulseNews
அரசியல்

தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது; சென்னை ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல்

முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். தமிழில் ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்: த.வெ.க எம்.எல்.ஏ வைத்த முக்கிய கோரிக்கை இந்த வழக்கு கடந்த 25-ம்தேதி விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதற்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 27-க்குள்) தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை. குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறுவது தவறு. அவ்வாறு குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்த காரணத்துக்காக தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது. தேர்தல் தொடர்புடைய நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டதா என்பதை தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூபிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிப்பதற்கான காரணமாக கருத முடியாது. மேலும், தேர்தல் செலவு கணக்கையும், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றதையும் மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் செய்ததாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது; சென்னை ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல்
PulseNews சுருக்கம்

பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, தி.மு.க வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்களான லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தன்னை எதிர்த்துத் தொடரப்பட்ட இந்த தேர்தல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி, நடிகர் விஜய்யும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை கடந்த 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics