முதல்வர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நன்றி...
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு 2.50 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த செய்தித்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும் இயக்குநர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. இது “ஒரு படைப்பாளிக்கு அரசு வழங்கும் மிகப்பெரிய கவுரவம்“
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு 2.50 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்ததற்காக, தமிழக முதல்வர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும், செய்தித்துறை அமைச்சருக்கும் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் இந்த நன்றியை அவர் கூறியுள்ளார். ஒரு படைப்பாளிக்கு அரசு அளிக்கும் மிகப்பெரிய கௌரவமாக இதை தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.