ராஜகணபதி கோயிலில் திருவிளக்கு பூஜை 2000 பெண்கள் பங்கேற்றனர்
சேலம், ஆக.26: சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயிலில், கடந்த மே மாதம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. கடந்த 5ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. வரும் 30ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் 25 யாக குண்டங்கள், மற்றொரு இடத்தில் 21 யாக குண்டங்கள்...
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயிலில், கடந்த மே மாதம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி கடந்த 5-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்ட நிலையில், வரும் 30-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்காக கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் 25 யாக குண்டங்களும், மற்றொரு இடத்தில் 21 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 2,000 பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.