திருக்கோணேஸ்வரத்தை தொடர்ந்து திருக்கேதீஸ்வரத்திலும் அடாவடி : ஆலய வரலாற்றை மறைக்கும் தொல்லியல் திணைக்களம்!
மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடாமல் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், ஆலயச்சூழல் தொல்பொருளுடன் தொடர்புட...

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் நாட்டப்பட்டுள்ள புதிய பெயர்ப்பலகையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் மற்றும் நந்தி சிலைகள் குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். திருக்கோணேஸ்வரத்தை போன்று இங்கும் ஆலய வரலாற்றை மறைக்கும் வகையில் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.