ஜவ்வாது மலை: பட்டா தருவதாகக் கூறி ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய 6 வனத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்
ஜவ்வாது மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் அரசு நிலங்களுக்குப் பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக 6 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த…

ஜவ்வாது மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் அரசு நிலங்களுக்குப் பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக 6 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிலங்களுக்குப் பட்டா பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த இந்த அதிகாரிகள், மலைவாழ் மக்களை மிரட்டியும் உள்ளனர். குறிப்பிட்ட பணத்தை வழங்கத் தவறினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இத்தகைய முறையற்ற செயலில் ஈடுபட்டதன் காரணமாகவே இவர்கள் அனைவரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.