சமாதானம் செய்வதாக அத்துமீறிய பூசாரி! நிர்வாண வீடியோ வைத்து மிரட்டல்... வீடியோ அழைப்பில் சிக்கிய கல்லூரி மாணவி! தருமபுரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!!!
தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வைத்து மிரட்டப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். கணவரின் நண்பரான பூசாரி ரகுராம் மற்றும் சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் தன்னை மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ரகுராம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். சமாதானம் செய்வதாக கூறி நெருக்கம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவரின் நண்பரான பூசாரி ரகுராம், இருவருக்கும் இடையிலான பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி அந்தப் பெண்ணிடம் நெருக்கமாக பழகியுள்ளார். இதையும் படிங்க: மிஸ் பண்ணிட்டாத்தீங்க.... ITI-யில் சேரும் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 30,000 சம்பளம்... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு...!!! அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பயன்படுத்தி மிரட்டிய ரகுராம், பெண்ணை கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்ததாகவும், அந்த நேரத்தை ரகசியமாக பதிவு செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த பதிவுகளைக் காட்டியும் தொடர்ந்து அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. வீடியோ அழைப்பில் மிரட்டிய மற்றொரு நபர் இதற்கிடையே, ரகுராமின் நண்பரான சென்னையைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு அந்தப் பெண்ணின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது. அவரும் தனிப்பட்ட புகைப்படங்களை காட்டி பேசுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீடியோ அழைப்பில் ஆடையின்றி தோன்றும்படி கட்டாயப்படுத்தி, அதை ரகசியமாக பதிவு செய்ததாகவும் போலீசில் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை வைத்துக்கொண்டு தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று ராஜ்குமார் தொடர்ந்து மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர், வீடியோவை பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் அண்ணன் ஆகியோரின் தொலைபேசி எண்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. ரகுராம் கைது மேலும், தனிப்பட்ட வீடியோ மிரட்டல் தொடர்பாக பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில் ரகுராமை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், மிரட்டல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரகுராம் இதேபோல் வேறு பெண்களையும் மிரட்டியுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஒவ்வொரு நாளாக நடந்த கொடுமை.. காதலனுக்காக கண்டுகொள்ளாத கொடூர தாய்.!

தருமபுரி மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து மிரட்டப்படுவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கணவரின் நண்பரான ரகுராம் என்ற பூசாரியும், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமாரும் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
சமாதானம் செய்து வைப்பதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் நெருக்கம் ஏற்படுத்திய பூசாரி ரகுராம், காணொளி அழைப்பின் மூலம் அவரை மிரட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் ரகுராமை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ராஜ்குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.