PulseNews
சினிமா

சொத்துதகராறில் ஆத்திரமடைந்த அண்ணி சமையலறை சப்பாத்தி கட்டையால்.... கொழுந்தனை ஒரே போடு...! அடுத்து நடந்த அதிர்ச்சி...!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் 66 வயது பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். அவரை அவரது அண்ணி நதியா, சமையலறையில் இருந்த சப்பாத்திக் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைமறைவான நதியாவை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து விவகாரத்தில் தொடர்ந்து மோதல் ஆரல்வாய்மொழி பகுதியில் வசித்து வந்த நதியாவுக்கும், அவரது கணவரின் தம்பியான பாலகிருஷ்ணனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக சொத்துத் தகராறு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் பலமுறை பேசி சமாதானப்படுத்த முயன்றும், பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதையும் படிங்க: நல்லதுக்கு காலமில்லை..... பி.இ. பட்டதாரி இளைஞர் எடுத்த விபரீத முடிவு..! சிக்கிய கடிதத்தில் இருந்த அந்த ஒரு வரி.! கதறும் பெற்றோர்!!! அதிகாலையில் மீண்டும் வெடித்த தகராறு இந்நிலையில், இன்று அதிகாலை இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேரம் செல்லச் செல்ல தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நதியா சமையலறையில் இருந்த சப்பாத்திக் கட்டையை எடுத்ததாக தெரிகிறது. அதைக் கொண்டு பாலகிருஷ்ணனின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த நதியா அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது பாலகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நதியாவை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் உயிரிழப்பில் முடிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படிங்க: நள்ளிரவு நேரத்தில் முகமூடி ஆசாமி செய்த அலப்பறை...! இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்.....!!!

Tamil Spark14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சொத்துதகராறில் ஆத்திரமடைந்த அண்ணி சமையலறை சப்பாத்தி கட்டையால்.... கொழுந்தனை ஒரே போடு...! அடுத்து நடந்த அதிர்ச்சி...!!!
PulseNews சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சொத்துத் தகராறு காரணமாக நதியாவுக்கும், அவரது கணவரின் தம்பியான 66 வயது பாலகிருஷ்ணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த நதியா சமையலறையில் இருந்த சப்பாத்திக் கட்டையால் பாலகிருஷ்ணனைத் தாக்கியுள்ளார்.

தலையில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ள நதியாவைப் பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema