PulseNews
வணிகம்

சொத்து வரி நோட்டீஸ் பெற்றவர்களுக்கு சென்னை மாநகராட்சியின் அவசர அறிவிப்பு: 15 நாட்களில் மேல்முறையீடு செய்வது எப்படி?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு மறுமதிப்பீடு செய்யப்பட்ட சொத்து வரி நோட்டீஸ்கள் அண்மையில் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் செலுத்திய வரியை விட பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நோட்டீஸைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து, சமூக ஊடகங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்களின் இந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து, "மாநகராட்சி பொதுவான வரி உயர்வை அமல்படுத்தவில்லை என்றும், சொத்துக்களின் பரப்பளவு மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ள 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு மட்டுமே இந்த மறுமதிப்பீடு (Reassessment) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. யாருக்கு எவ்வளவு வரி உயர்ந்துள்ளது? மாநகராட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவலின்படி, மொத்தம் நோட்டீஸ் அனுப்பப்பட்ட 3,49,000 பேரில்: சுமார் 3.04 லட்சம் குடியிருப்பு சொத்துகளுக்கு (55% கட்டிடங்களுக்கு) வரி உயர்வு என்பது ரூ.1,000-க்கும் குறைவாகவே உள்ளது. உதாரணமாக, முன்பு ரூ.200 கட்டியவர்கள் தற்போது ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். மறுமதிப்பீடு செய்யப்பட்ட மொத்த சொத்துக்களில் 95ரூ.5,000-க்குள் தான் வரி உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு வராமல் மறுமதிப்பீடு செய்தது எப்படி? அதிகாரிகளோ அல்லது ஊழியர்களோ நேரடியாக வீட்டிற்கு வந்து நிலத்தையோ கட்டிடத்தையோ அளக்காமல் எவ்வாறு இந்த மறுமதிப்பீடு செய்யப்பட்டது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மாநகராட்சி நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து விளக்கமளித்துள்ளது: வான்வழியாக ட்ரோன்களைப் பயன்படுத்தி கட்டிடங்களின் பரப்பளவு துல்லியமாக அளவிடப்பட்டது. புவியியல் தகவல் அமைப்பு (GIS) மற்றும் செயற்கைக்கோள் வரைபடத் தரவுகள் (Satellite Data) மூலமாக கட்டிடங்களின் மாற்றங்கள் கண்டறியப்பட்டன. தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) மற்றும் ஜிஎஸ்டி (GST) துறையின் தரவுகள் ஒப்பிடப்பட்டன. உதாரணமாக குடியிருப்பு பயன்பாட்டிற்கு என்று பதிவு செய்து வரி கட்டி வந்த வீடுகளில், கடைகளோ அல்லது வணிக ரீதியான கட்டிடங்களோ கட்டப்பட்டு இயங்கி வந்தால், மின்சார வாரியம் மற்றும் ஜிஎஸ்டி தரவுகள் மூலம் அது கண்டறியப்பட்டு வர்த்தக ரீதியான சொத்து வரியாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மறுமதிப்பீடு நோட்டீஸைப் பெற்ற சொத்து உரிமையாளர்களுக்கு மேல்முறையீடு செய்ய மாநகராட்சி வாய்ப்பளித்துள்ளது. நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் முறையீடு செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் (Regional Deputy Commissioner) உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம். பெறப்படும் நியாயமான மேல்முறையீட்டு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி உறுதியளித்துள்ளது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சொத்து வரி நோட்டீஸ் பெற்றவர்களுக்கு சென்னை மாநகராட்சியின் அவசர அறிவிப்பு: 15 நாட்களில் மேல்முறையீடு செய்வது எப்படி?
PulseNews சுருக்கம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு, மறுமதிப்பீடு செய்யப்பட்ட சொத்து வரி நோட்டீஸ்கள் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளன. பழைய வரியை விட தற்போது வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பொதுமக்களின் இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மாநகராட்சி பொதுவான வரி உயர்வை அமல்படுத்தவில்லை என்றும், சொத்துக்களின் பரப்பளவு அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு குறித்து ஆட்சேபனை இருப்பின், 15 நாட்களுக்குள் உரிய முறையில் மேல்முறையீடு செய்ய வழிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business