10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்.. எப்போ கையில கிடைக்கும்? அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன சூப்பர் அப்டேட்
மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தனியார் பங்களிப்புடன் ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் 200 மாணவர் விடுதிகள் கட்டப்பட உள்ளதாகவும், இதன் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகளை விரைவில் வழங்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனியார் பங்களிப்புடன் ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் 200 புதிய மாணவர் விடுதிகள் கட்டப்படவுள்ளன. இதன் மூலம் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.