PulseNews
வணிகம்

Coimbatore Vellalore Bus Terminal: கோவை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! வெள்ளலூரில் உருவாகும் புதிய பேருந்து முனையம் – முழு விவரம்!

<p style="text-align: justify;"><strong>Vellalore Bus Terminal:</strong> கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வெள்ளலூரில் பகுதியளவில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தைப் புதிய பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை மட்டும் வெள்ளலூர் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு, மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p> <h3 style="text-align: justify;">₹168 கோடி திட்டம் தற்போது ₹126 கோடி திட்டமாக மாற்றம்</h3> <p style="text-align: justify;">முதற்கட்டமாக வெள்ளலூரில் சுமார் ₹168 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், திட்டத்தின் பயன்பாடு மற்றும் செயல்படுத்துவதில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் அதன் வடிவமைப்பில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி, <strong>சுமார் ₹126 கோடி மதிப்பீட்டில்</strong> தென் மாவட்டங்களுக்கான பேருந்து முனையமாக மட்டும் வெள்ளலூர் பேருந்து நிலையம் மாற்றியமைக்கப்பட உள்ளது.</p> <p style="text-align: justify;">இதற்கான கட்டமைப்பு, பேருந்து இயக்கம் மற்றும் தேவையான வசதிகள் தொடர்பான பணிகள் புதிய DPR-ல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு அடுத்தகட்டப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">சிங்காநல்லூரில் இருந்து தென் மாவட்ட பேருந்துகள் மாற்றம்</h3> <p style="text-align: justify;">தற்போது கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பல பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டு வருகின்றன. வெள்ளலூர் முனையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்து சேவைகள் படிப்படியாக அங்கு மாற்றப்படும்.</p> <p style="text-align: justify;">அதே நேரத்தில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முழுமையாக மூடப்படாது. நகரப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கான முக்கிய மையமாக அது தொடர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்காநல்லூர் பகுதியில் நீண்ட தூர பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து அழுத்தத்தை குறைக்க முடியும் என மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.</p> <h3 style="text-align: justify;">ஒரே நேரத்தில் 64 பேருந்துகளை நிறுத்தும் வசதி</h3> <p style="text-align: justify;">புதிய திட்டத்தின் கீழ் வெள்ளலூர் பேருந்து முனையத்தில் ஒரே நேரத்தில் 64 பேருந்துகளை நிறுத்தும் வகையில் வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. எதிர்காலத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கேற்ப முனையத்தின் திறனை மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன், முதல் தளத்தில் வணிக வளாகம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து நிலையத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், வணிக ரீதியான வருவாயையும் உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">ஏற்கனவே தொடங்கிய திட்டம் ஏன் மாற்றப்பட்டது?</h3> <p style="text-align: justify;">கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, மத்திய அரசின் ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் பேருந்து துறைமுகம் (Bus Port) அமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சி சாத்தியமாகாத நிலையில், <strong>Bus Port திட்டம்</strong> கைவிடப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டமைப்பை வீணாக விடாமல், அதைத் தென் மாவட்டங்களுக்கான பேருந்து முனையமாக மாற்றிப் பயன்படுத்தும் வகையில் தற்போதைய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">இணைப்புச் சாலைகள் விரிவாக்கம் முக்கியம்</h3> <p style="text-align: justify;">வெள்ளலூர் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வருவதில் முக்கியமான அம்சமாக அதன் இணைப்புச் சாலைகள் பார்க்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் பயணிகள் வருகை தரும் நிலையில், தற்போதுள்ள சாலைகளின் அகலம் மற்றும் போக்குவரத்து கையாளும் திறன் போதுமானதாக இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு, பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள இணைப்புச் சாலைகளை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு ஏற்படக்கூடிய போக்குவரத்து சிக்கல்களை முன்கூட்டியே தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">உள்கட்டமைப்பில் கூடுதல் கவனம் தேவை</h3> <p style="text-align: justify;">பேருந்து நிலையத்தை கட்டமைப்பது மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள சாலை, மின்சாரம், குடிநீர், கழிவுநீர், பயணிகள் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை உள்கட்டமைப்புகளும் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இணைப்புச் சாலை விரிவாக்கத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்றால், பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பின்னரும் தற்காலிக ஏற்பாடுகளையே நம்ப வேண்டிய சூழல் உருவாகலாம் என நுகர்வோர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதற்கு உதாரணமாக உக்கடம் பேருந்து நிலையத்தில் மின் இணைப்பு தொடர்பான நிலையை சுட்டிக்காட்டி, வெள்ளலூர் திட்டத்தில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.</p>

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Coimbatore Vellalore Bus Terminal: கோவை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! வெள்ளலூரில் உருவாகும் புதிய பேருந்து முனையம் – முழு விவரம்!
PulseNews சுருக்கம்

கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வெள்ளலூரில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அப்பகுதியில் பகுதியளவில் கட்டப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மேம்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய திட்டத்தின்படி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை மட்டும் வெள்ளலூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்குவதற்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business