விவசாயிகளின் கணக்கில் சேரப்போகும் புதிய தொகை.. ஊக்கத்தொகையை உயர்த்தி பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிதி நெருக்கடிக்கு இடையிலும் நெல் மற்றும் கரும்பு பயிரிடும் விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, மாநில அரசின் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2750 மற்றும் கரும்பு மெட்ரிக் டன்னுக்கு ரூ.4000 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நிதி நெருக்கடியான சூழலிலும், நெல் மற்றும் கரும்பு பயிரிடும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசின் ஊக்கத்தொகையை அவர் உயர்த்தியுள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, சன்னரக நெல் குவிண்டாலுக்கு 2,750 ரூபாயாகவும், கரும்பு மெட்ரிக் டன்னுக்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் கணக்கிற்கு புதிய ஊக்கத்தொகை சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.