'விவசாயிகள் எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 தள்ளுபடி செய்ய வேண்டும்'; சிபிஎம் பெ.சண்முகம் வலியுறுத்தல்..!
''விவசாயிகள் எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் 75 ஆயிரம் ரூபாயாவது தள்ளுபடி என்று அறிவிப்பதுதான் விவசாயிகளுக்கு ஓரளவாவது திருப்தியைக் கொடுக்கும்.'' என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; ''விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாகக் கடன் தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு அவர்கள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி என்றும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் 75 ஆயிரம் ரூபாயாவது தள்ளுபடி என்று அறிவிப்பதுதான் விவசாயிகளுக்கு ஓரளவாவது திருப்தியைக் கொடுக்கும். எனவே, இதை நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.'' என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனிடையே, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகள் எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும், அனைவருக்கும் குறைந்தபட்சம் 75,000 ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அறிவிப்பு மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவாவது திருப்தியளிக்கும் என்று தனது எக்ஸ் தளப் பதிவில் பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.