காவிரி டெல்டாவை காப்பாற்றுமா கபினி உபரி நீர்... 12.60 லட்சம் ஏக்கர் சாகுபடி கேள்விக்குறி.?
குறுவை பருவத்துக்கான நெற் பயிர் நடவு காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது.இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.51 லட்சம் ஏக்கராகவும், திருவாரூர் மாவட்டத்தில் 1.52 லட்சம் ஏக்கர் இலக்கில் 1.15 லட்சம் ஏக்கராகவும் குறுவை சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது.

குறுவை பருவத்தில் நெல் நடவு செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த பருவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.51 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 1.52 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 1.15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து உபரி நீர் வருமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், மொத்தம் 12.60 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.