PulseNews
வணிகம்

Puducherry power cut : புதுச்சேரியில் 7 மணி நேர மின்தடை! பல பகுதிகளில் மின்சாரம் இருக்காது!

<p>புதுச்சேரி : புதுச்சேரி மரப்பாலம் துணை மின்நிலையத்தில் உயர் மின்னழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று ஆகஸ்ட் 25, செவ்வாய்க்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சாரத் துறை அறிவித்துள்ளது.</p> <p>பராமரிப்புப் பணிகளின் காரணமாக வெவ்வேறு மின்பாதைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெவ்வேறு நேரங்களில் மின்தடை ஏற்படும். பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது அத்தியாவசிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p> <p>22 கே.வி. புதிய மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்:</p> <ul> <li>உப்பளம் நீர்த்தேக்கத் தொட்டி பகுதி</li> <li>இந்திரா காந்தி விளையாட்டு மைதானம்</li> <li>புதிய துறைமுகம்</li> <li>கோலாஸ் நகர் முழுவதும்</li> <li>பிரான்சுவா தோப்பு</li> <li>ராசு உடையார் தோட்டம்</li> <li>பால்வாடி வீதி</li> <li>ரங்கநாதன் வீதி</li> <li>பாரதியார் வீதி</li> <li>அழகர்சாமி கோவில் வீதி</li> <li>தேசமுத்து மாரியம்மன் கோவில் வீதி</li> <li>துறைமுக சாலை பகுதி</li> </ul> <p>இந்தப் பகுதிகளில் சுமார் 7 மணி நேரம் மின்விநியோகம் பாதிக்கப்படும் என்பதால், குடிநீர், மின்சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் முன்கூட்டியே செய்துகொள்ளலாம்.</p> <h3>காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை</h3> <p>மேலும், முருகம்பாக்கம், ராஜ்நிவாஸ் மற்றும் பிள்ளைத்தோட்டம் மின்பாதைகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை ஏற்படும்.</p> <h2>முருகம்பாக்கம் மின்பாதை</h2> <p>கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்:</p> <ul> <li>அரியாங்குப்பம் பகுதி</li> <li>நோணாங்குப்பம்</li> <li>மணவெளி</li> <li>ஓடவெளி</li> <li>காக்காயன் தோப்பு</li> <li>வீரம்பட்டினம்</li> <li>சின்ன வீரம்பட்டினம்</li> <li>ஆர்.கே. நகர்</li> <li>சோழபுரம்</li> <li>சுப்பையா நகர்</li> <li>சொர்ணா நகர்</li> <li>அன்னை நகர்</li> <li>ஸ்ரீராம் நகர்</li> <li>அருந்ததிபுரம்</li> <li>காலன்தோட்டம்</li> <li>திருமால் நகர்</li> <li>பூங்காவனம் கார்டன்</li> <li>இந்திரா நகர்</li> <li>ராஜ்நிவாஸ் மின்பாதை</li> </ul> <p>தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் பகுதியில் மேற்கண்ட நேரத்தில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.</p> <h2>பிள்ளைத்தோட்டம் மின்பாதை</h2> <p>பிள்ளைத்தோட்டம் மின்பாதைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை:</p> <ul> <li>நேதாஜி நகர்</li> <li>எம்.ஜி.ஆர். நகர்</li> <li>ரமணர் நகர்</li> <li>சிவா விஷ்ணு நகர்</li> <li>ஜெயமூர்த்தி ராஜா நகர்</li> <li>இன்ஜினியர்ஸ் காலனி</li> <li>அன்சாரி துரைசாமி நகர்</li> <li>திருப்பூர் குமரன் நகர் பகுதி</li> <li>ஜெயம் நகர்</li> <li>பி.எஸ்.சி. வங்கி காலனி</li> <li>ஜோதி நகர்</li> <li>வாரியார் நகர்</li> <li>காயத்ரி நகர்</li> <li>ஜான்பால் நகர்</li> <li>நடேசன் நகர்</li> <li>மாரியம்மன் நகர் பகுதி</li> <li>சித்தானந்தா நகர்</li> <li>வாசன் நகர்</li> <li>கூடீசாமி நகர்</li> <li>சிவராம் நகர்</li> <li>ஐயப்பசாமி நகர் விரிவு</li> <li>ஜான்சி நகர் பகுதி</li> <li>ஓம் சக்தி நகர்</li> <li>மிதுன் நகர்</li> <li>முனுசாமி பிள்ளை நகர்</li> <li>சீனிவாசன் நகர்</li> <li>பாவாணர் நகர்</li> <li>விக்டோரியா நகர்</li> <li>வில்லியனூர் மெயின் ரோடு</li> <li>விவேகானந்தா நகர்</li> <li>லூயிஸ் நகர்</li> <li>இந்து நகர்</li> <li>எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதி</li> <li>அண்ணா நகர் பகுதி</li> <li>பீட்டர் நகர்</li> <li>மோகன் நகர் பகுதி</li> <li>தந்தை பெரியார் நகர்</li> <li>சாரதாம்பாள் நகர்</li> <li>வெண்ணிலா நகர்</li> <li>பாக்கமுடையான்பேட் பகுதி</li> <li>சத்தியா நகர்</li> <li>ஆனந்த ரங்கப்பிள்ளை நகர்</li> <li>ஞானப்பிரகாசம் நகர்</li> <li>சக்தி நகர் பகுதி</li> </ul> <h2>பொதுமக்களுக்கு அறிவுரை</h2> <p>மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் மின்விநியோகம் நிறுத்தப்படும் நேரத்தை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக குடிநீர் சேமிப்பு, மின்சாதனங்களின் பயன்பாடு மற்றும் அத்தியாவசிய பணிகளை மின்தடை நேரத்திற்கு ஏற்ப திட்டமிடுவது பயனுள்ளதாக இருக்கும். பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் மின்விநியோகம் வழக்கம்போல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Puducherry power cut : புதுச்சேரியில் 7 மணி நேர மின்தடை! பல பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
PulseNews சுருக்கம்

புதுச்சேரி மரப்பாலம் துணை மின்நிலையத்தில் உயர் மின்னழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, இன்று ஆகஸ்ட் 25, செவ்வாய்க்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சாரத் துறை அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெவ்வேறு மின்பாதைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும். எனவே, பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business