PulseNews
வணிகம்

டெல்டா விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! மேட்டூர் அணை திறப்பு எப்போது? CM விஜய் அதிரடி உத்தவு!

<p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>Mettur Dam opening date September 1:</strong></span> தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து வரும் செப்டம்பர் 1, 2026 முதல் 45 நாட்களுக்கு நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அவர்கள் 01.09.2026 அன்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்கள் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளார்.</p> <h3 style="text-align: justify;">நீர் இருப்பு மற்றும் சட்டப் போராட்டங்கள்</h3> <p style="text-align: justify;">2026-2027 பாசன ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு 41.223 டி.எம்.சி. மட்டுமே இருந்தது. தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரிப் படுகையில் போதிய மழைப்பொழிவு இல்லாத நிலையிலும், கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர்த் தேவைகளுக்காகத் தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு வந்தது.</p> <p style="text-align: justify;">தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு சட்ட மற்றும் நிர்வாக ரீதியாகத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் வலியுறுத்தப்பட்டதன் விளைவாக, பில்லிகுண்டுலுவில் வெவ்வேறு காலகட்டங்களில் வினாடிக்கு 3,500 கனஅடி, 9,000 கனஅடி மற்றும் 12,000 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.</p> <h3 style="text-align: justify;">விவசாயிகளுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் பாசன ஏற்பாடுகள்</h3> <p style="text-align: justify;">தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதாலும், எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டும் டெல்டா பாசனத்திற்காக நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதைகள், உரங்கள் மற்றும் பிற வேளாண் இடுபொருட்களைப் போதிய அளவில் இருப்பில் வைப்பதையும், குறுகிய கால மற்றும் நடுத்தர கால நெல் ரகங்களைத் தேர்வு செய்வதற்கான தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குவதையும் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">விவசாயிகள் கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திச் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும் "ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்" கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p> Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டெல்டா விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! மேட்டூர் அணை திறப்பு எப்போது? CM விஜய் அதிரடி உத்தவு!
PulseNews சுருக்கம்

தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் 1, 2026 முதல் 45 நாட்களுக்கு அணையில் இருந்து நீர் திறந்துவிட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business