த.வெ.க ஆட்சியில் பத்திரப்பதிவு, மின்வாரியத்தில் ஊழல் முற்றிலும் ஒழிப்பு: ப. சிதம்பரம் பாராட்டு
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க) ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பத்திரப்பதிவுத் துறை மற்றும் மாநில மின்வாரிய அலுவலகங்களில் ஊழல் அறவே இல்லை அல்லது பூஜ்ஜியமாக குறைந்துவிட்டது என்று முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தெரிவித்தார். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ‘தி இந்து 360’ யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், பொதுமக்களின் கருத்துகளை மேற்கோள் காட்டி பேசிய ப. சிதம்பரம், எனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் மக்களுடன் உரையாடியபோது, பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணப் பதிவின் போதோ அல்லது ஆசிரியர் பணியிட மாறுதல்களிலோ லஞ்சம் பெறப்படுவதில்லை என்று மக்கள் தெரிவித்தனர். மின்வாரிய அலுவலகங்களிலும் ஊழல் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனங்களுக்கான அனுமதி ஆணைகள் அஞ்சல் வழியிலேயே அனுப்பப்பட்டு வருவதையும் அறிய முடிகிறது. மாநில அரசின் செயல்பாடு குறித்த மதிப்பீடு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு பொறுப்பேற்று வெறும் 105 நாட்களே ஆகியுள்ளது; இது மிகக் குறுகிய கால அவகாசம் என்று குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கள நிலவரத்தை சரியாகக் கணிக்கத் தவறிவிட்டனர். தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் 80% அரசியல் களத்தை ஆக்கிரமித்துள்ளதாகவே அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். இத்தனை ஆண்டுகளாக இவ்விரு கட்சிகளும் தங்களுக்குள் சுமார் 200 சட்டமன்றத் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டதால் சட்டமன்றத்தில் 80% இடத்தை மட்டுமே அவை பிடித்திருந்தனவே தவிர, ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் அல்ல. மேலும், இம்முறை 'Gen Z' (வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். எனது தொகுதியில் வாக்குப்பதிவு நாளன்று காலை 11 மணிக்கே இளம் தலைமுறையினர் தங்களது வாக்குகளை முழுமையாக பதிவு செய்துவிட்டனர். தமிழகத்தில் மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களைத் தொடர்வது குறித்துப் பேசிய ப. சிதம்பரம், எந்தவொரு மானியத் திட்டத்திலும் மறைமுகப் பலன்கள் (Externalities - சமூக தாக்கம்) உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். அத்தகைய கூடுதல் பலன்கள் இருந்தால் அந்தத் திட்டத்தை நாம் வரவேற்கலாம்; இல்லையெனில் நிராகரிக்கலாம். உதாரணமாக, மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்தை எடுத்துக்கொண்டால், காரைக்குடியில் மகளிர் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்ட போது, சுற்றியுள்ள 20 முதல் 25 கி.மீ சுற்றளவு கொண்ட கிராமத்து மக்கள் இந்தப் பேருந்து வசதி மட்டும் இல்லையென்றால் தங்கள் பெண் குழந்தைகளைக் கல்லூரிக்கு அனுப்பியிருக்க மாட்டோம் என்று கூறுகின்றனர். எனவே, இந்தத் திட்டம் மகத்தான சமூகப் பலனைத் தருகிறது என்று விளக்கினார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் உள்ளபோது, பத்திரப்பதிவு மற்றும் மின்சார வாரிய அலுவலகங்களில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, அது பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொதுமக்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் மக்களுடன் உரையாடியபோது அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டியதாக அவர் கூறியுள்ளார்.