தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள ஜாம்போயே கிராமத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த கடந்த 18-ம் தேதி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பெரிய மண் குவியல் பொள பொளவென சரிந்து விழுந்தது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை [...] The post தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள ஜாம்போயே கிராமத்தில், பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 18-ம் தேதி நடைபெற்ற இந்த விபத்தின் போது, 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்தச் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சுரங்கத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மீது பெரிய அளவிலான மண் சரிந்து விழுந்ததில் பலர் மண்ணில் புதையுண்டனர். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளிக் காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.