PulseNews
உலகம்

''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?

<p><span dir="auto">அமெரிக்காவுடன் சமீபத்தில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வாஷிங்டன் நம்பிக்கையான சூழலை பேணினால், டெஹ்ரான் அமைதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியுள்ளார். ஈரான், போரை முடிவுக்குக் கொண்டுவரும், ஆனால் அதற்கு அமெரிக்க அதிபர் </span><span dir="auto">டொனால்ட் ட்ரம்ப்பின்</span><span dir="auto"> முழு ஆதரவும் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.</span></p> <p><span dir="auto">புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில், ஈரான் அமைதிப் பாதையில் முன்னேற முயற்சிப்பதாக பெஷெஷ்கியன் நேற்று தெரிவித்தார். மேலும், "நாட்டில் ஒற்றுமை, வலிமை மற்றும் ஒருமைப்பாடு நிலவுவதால், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு இதுவே சிறந்த தருணம். அமெரிக்கா அவநம்பிக்கை சூழலை முடிவுக்குக் கொண்டுவந்தால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் முன்னேற உறுதியாக உள்ளோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.</span></p> <h2><span dir="auto">அமெரிக்கா தாக்கினால், தகுந்த பதிலடி கொடுப்போம் - பெஷேஷ்கியன்</span></h2> <p><span dir="auto">அமெரிக்கா ஒப்புக்கொள்ளும் நிபந்தனைகளுக்கு ஏற்ப, ஈரான் தனது கடமைகளை நிறைவேற்றும் என்று அவர் கூறினார். மேலும், எதிர் தரப்பு பலத்தை பயன்படுத்த முடிவு செய்தால், ஈரான் அதை ஏற்றுக்கொள்ளாது என்றும் பெஷெஷ்கியன் கூறினார். ஈரானின் நடவடிக்கைகளுக்கான இறுதி அடிப்படை, அதன் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் முடிவுகளாகவே இருக்கும். தாக்கப்பட்டால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமெரிக்காவை பெஷெஷ்கியன் எச்சரித்தார்.</span></p> <p><span dir="auto">முன்னதாக, ஈரான் அதிபர் தனது உரிமைகளை பாதுகாப்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடர்வதில் நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதோடு, டெஹ்ரான் பணிந்துபோக நிர்பந்திக்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.</span></p> <p><span dir="auto">கடந்த வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரம்) தனது அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பேட்டியில் பெஷெஷ்கியன் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் ஈரான் அரசாங்கம் எடுத்த முடிவை அவர் ஆதரித்துப் பேசினார்.</span></p> <h2><strong><span dir="auto">அமெரிக்கா அமைதியாக இருக்கும் வரை, ஈரானும் அதை ஆதரிக்கும் - பெஷெஷ்கியன்</span></strong></h2> <p><span dir="auto">"புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றும் வரை, ஈரான் தனது உறுதிமொழிகளை கடைபிடிக்கும். அவர்கள் தங்களது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறும் இடங்களில், நாங்கள் தொடர்ந்து செயல்பட எந்தக் கடமையும் இல்லை," என்று ஈரான் அதிபர் கூறினார்.</span></p> <p><span dir="auto">இந்த வாரத்தின் தொடக்கத்தில், தாம் பதவி விலகுவதாகக் கூறப்படுவதை மறுத்த பெஷெஷ்கியன், தனது முழு பணிகளையும் தொடர்ந்து செய்வேன் என்றும் கூறினார். புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் தலைமைக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக வதந்திகள் பரவிய நிலையில், அந்நாட்டு அதிபர் பெஷெஷ்கியனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.</span></p> <p> </p> <p> </p> <p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/here-are-simple-secret-tips-to-keep-green-vegetables-fresh-for-weeks-270605" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
PulseNews சுருக்கம்

அமெரிக்கா நம்பிக்கையான சூழலை பேணினால் மட்டுமே ஈரான் அமைதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முழு ஆதரவு தேவை என்றும், அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றும் வரை மட்டுமே ஈரான் ஒப்பந்தத்தின்படி செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா பலத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பெஷெஷ்கியன் எச்சரித்துள்ளார். நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் முடிவுகளே ஈரானின் நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், தாங்கள் பணிந்து போக மாட்டோம் என்றும் தங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்போம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#world