தெற்கு தாய்லாந்து தீவிரவாதிகள் தங்கள் நிலப்பரப்பைப் புகலிடமாகப் பயன்படுத்த மலேசியா அனுமதிக்காது- காலித்
தெற்கு தாய்லாந்தில் வன்முறையில் ஈடுபட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கும் குழுக்கள், மலேசியாவின் எந்தவொரு பகுதியையும் பதுங்குமிடமாகவோ அல்லது பாதுகாப்பான புகலிடமாகவோ பயன்படுத்த மலேசியா அனுமதிக்காது என டத்தோ ஶ்ரீ முகமது காலித் நோர்டின் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளையும் சமீபத்திய சம்பவங்களையும் மலேசியா தீவிரமாகக் கருதுவதாகவும், தெற்கு தாய்லாந்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். தெற்கு தாய்லாந்தில் வன்முறையைப் பயன்படுத்தி, அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எங்கள் [...] The post தெற்கு தாய்லாந்து தீவிரவாதிகள் தங்கள் நிலப்பரப்பைப் புகலிடமாகப் பயன்படுத்த மலேசியா அனுமதிக்காது- காலித் appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
தெற்கு தாய்லாந்தில் வன்முறையில் ஈடுபட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஏற்க மறுக்கும் குழுக்கள் மலேசியாவின் எந்தவொரு நிலப்பகுதியையும் தங்குமிடமாகவோ அல்லது பாதுகாப்பான புகலிடமாகவோ பயன்படுத்துவதை மலேசியா ஒருபோதும் அனுமதிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலித் நோர்டின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் சமீபகாலமாக அரங்கேறும் வன்முறைச் சம்பவங்களை மலேசியா மிக தீவிரமாகக் கவனித்து வருவதாகக் கூறிய அவர், தெற்கு தாய்லாந்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் மலேசியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.