5 நிமிடங்கள் குளித்த இந்திய பெண்ணிற்கு ரூ.1.3 லட்சம் அபராதம்
சிட்னி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய பெண் ஒருவர், குளியலின் போது எழுந்த நீராவியால் கட்டிடத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், அவருக்கு 1,800 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.30 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. “யாருக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்று பாருங்கள்” என்ற வாசகத்துடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அதில் நடந்த சம்பவத்தை அந்த பெண் விவரிக்கிறார். அவர் குளியலை முடித்து [...] The post 5 நிமிடங்கள் குளித்த இந்திய பெண்ணிற்கு ரூ.1.3 லட்சம் அபராதம் appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், குளியலறையில் 5 நிமிடங்கள் குளித்தபோது ஏற்பட்ட நீராவியால் கட்டிடத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு 1,800 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை விளக்கி அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அபராதம் விதிக்கப்பட்ட தகவலை அவர் பகிர்ந்துள்ள நிலையில், இந்தச் செய்தி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.