கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம்: நிர்வாகங்களே முடிவு செய்ய அறநிலையத்துறை அனுமதி
தமிழகத்தில் உள்ள கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் அந்தந்த கோயில் நிர்வாகங்களுக்கே வழ…

தமிழகத்தில் உள்ள கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் அந்தந்த கோயில் நிர்வாகங்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு கோயிலிலும் நிலவும் சூழலுக்கு ஏற்பவும், தங்களின் தேவைக்கேற்பவும் செல்போன் பாதுகாப்பு மையங்களுக்கான கட்டணங்களை கோயில் நிர்வாகங்களே தன்னிச்சையாக முடிவு செய்து கொள்ளலாம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பாதுகாப்பு மையங்களை நிர்வகிப்பதற்கான நடைமுறைகளை அந்தந்த கோயில்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.