‘இப்ப வாங்கு, அப்புறம் கட்டு’ - டிஜிட்டல் கடன் வலையில் சிக்குகிறதா ஜென் ஸீ தலைமுறை?
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிதித் தொழில்நுட்பத் துறையின் அதீத வளர்ச்சியால் நுகர்வோரின் வாங்கும் பழக்கம் முற்றிலும் மாறியிருக்கிறது. குறிப்பாக 1997 முதல் 2012 வரை பிறந்த ‘ஜென்ஸீ’ (Gen Z) தலைமுறையில் ஒரு பிரிவினர், கடன் வாங்கியாவது தங்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற பழக்கத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிதித் தொழில்நுட்பத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி, நுகர்வோரின் வாங்கும் பழக்கவழக்கங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 1997 முதல் 2012 வரை பிறந்த ஜென் ஸீ தலைமுறையினர், 'இப்போது வாங்கு, பிறகு பணம் செலுத்து' என்ற முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
கடன்பட்டாவது தங்களுக்கு விருப்பமான பொருட்களைப் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு இந்தத் தலைமுறையின் ஒரு பிரிவினர் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிஜிட்டல் கடன் வசதிகள் அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.