மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!
<p>தமிழ்நாடு அரசு புதிய பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மதுரை மண்டலத்திற்கு ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் 20 புதிய BS-VI பேருந்துகள் ஒதுக்கீடு - மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.</p> <div dir="auto"><strong>புதிய பேருந்துகளின் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்</strong></div> <div dir="auto"> </div> <div dir="auto">தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (25.08.2026) தலைமைச் செயலகத்தில், பொதுமக்களின் வசதிக்காக ரூ. 290.08 கோடி மதிப்பிலான 250 புதிய பேருந்துகளின் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் சார்பில், மதுரை மண்டலத்திற்கு 2025–2026 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக ரூ. 9.20 கோடி திட்ட மதிப்பீட்டில் பெறப்பட்ட 20 புதிய BS-VI ரக டீசல் பேருந்துகளை, மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக செய்யப்பட்டுள்ள நவீன பாதுகாப்பு வசதிகள், அவசரகால உபகரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் BS-VI தொழில்நுட்பக் கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். இப்புதிய பேருந்துகள் அனைத்தும் தேவையான தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் இயக்கத்திற்கான ஏற்பாடுகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவையை வழங்க முழு தயார் நிலையில் உள்ளன.</div> <div dir="auto"> </div> <div dir="auto"><strong>இயக்கப்படும் வழித்தடங்கள்:</strong></div> <div dir="auto"> </div> <div dir="auto">மதுரை மண்டலத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருப்புவனம், செக்கானூரணி, சோழவந்தான், பொன்மேனி ஆகிய கிளைகள் மூலமாக பின்வரும் முக்கிய வழித்தடங்களில் இந்த 20 புதிய பேருந்துகளும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளன.</div> <div dir="auto"> </div> <div dir="auto">பெரியார் பேருந்து நிலையம் – மங்கலம்பட்டி (2 பேருந்துகள்)</div> <div dir="auto"> </div> <div dir="auto">பெரியார் பேருந்து நிலையம் – ஆஸ்டின்பட்டி</div> <div dir="auto"> </div> <div dir="auto">பெரியார் பேருந்து நிலையம் – சொட்டத்தட்டி</div> <div dir="auto"> </div> <div dir="auto">பெரியார் பேருந்து நிலையம் – குரண்டி</div> <div dir="auto"> </div> <div dir="auto"> சின்ன கண்மாய் – கைத்தறி நகர்</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பார்க் டவுன் – நிலையூர்</div> <div dir="auto"> </div> <div dir="auto"> அண்ணா பேருந்து நிலையம் – சாமநத்தம்</div> <div dir="auto"> </div> <div dir="auto"> அணுப்பானடி – மகாலட்சுமி நகர்</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பெரியார் பேருந்து நிலையம் – சமயநல்லூர்</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பெரியார் பேருந்து நிலையம் – பிரமனூர்</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பெரியார் பேருந்து நிலையம் – அதிகரை</div> <div dir="auto"> </div> <div dir="auto"> எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் – பாலாமூப்பன்பட்டி</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பெரியார் பேருந்து நிலையம் – விக்கிரமங்கலம்</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பெரியார் பேருந்து நிலையம் – நாட்டார்பட்டி</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பெரியார் பேருந்து நிலையம் – நாட்டார்மங்கலம்</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பெரியார் பேருந்து நிலையம் – புதுக்குளம்</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பெரியார் பேருந்து நிலையம் – குருவித்துறை</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பெரியார் பேருந்து நிலையம் – கருப்பட்டி</div> <div dir="auto"> </div> <div dir="auto"> பெரியார் பேருந்து நிலையம் – மஞ்சம்பட்டி</div> <div dir="auto"> </div> <div dir="auto">இப்புதிய BS-VI பேருந்துகளின் இயக்கத்தின் மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வழித்தடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மேம்பட்ட, பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவை கிடைக்கும். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (மதுரை) மேலாண்மை இயக்குநர் சரவணன், பொது மேலாளர் பாலமுருகன், துணை மேலாளர்கள், கிளை மேலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.</div>

தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ள புதிய பேருந்து திட்டத்தின் கீழ், மதுரை மண்டலத்திற்கு 9.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய பிஎஸ்-VI (BS-VI) ரக பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய இந்த பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய பேருந்துகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த நவீன பேருந்துகள் தற்போது மக்கள் சேவைக்கு தயார் நிலையில் உள்ளன.